ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறை நிவர்த்தி முகாம்

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுவரை கிடைக்காமல் இருந்தால், இது குறித்து தங்கள் குறைகள் மற்றும் எந்த அலுவலர்கள் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் எழுதி மனுக்களை இரட்டை பிரதிகளில் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 09/11/2016க்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் எழுத வேண்டியவை:


1.பெயர் மற்றும் முகவரி :
2.பி.பி.ஓ எண் :
3.ஓய்வு பெற்ற நாள் :
4.கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை :
5.குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்தில் இணைக்கவும்) :
6.முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் :
7.இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம் :
8.குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் :

மேலும், இதுதொடர்பாக ஓய்வூதியர் குறைகளை நேர்முகக் கூட்டம் வருகிற 15/11/2016 செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை 10:30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முக கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...