கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்தல், கட்டாய முககவசம், ஊரடங்கு நேரத்தை கடந்து தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 4344 எட்டியுள்ளது.
இந்நிலையில் கோவை சுந்தராபுரம் முருகா நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் 59 வயது மற்றும் 55 வயது சகோதரர்கள் இருவரும் தங்களது குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்களுடன் 70 மற்றும் 69 வயது மூதாட்டி இருவர், இவர்களின் மனைவிகள் குழந்தைகள் என ஒன்பது பேர் கூட்டு குடும்பமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அனைவரும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள சுகாதார நிலையம் சென்று பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர். இன்று அதன் முடிவில் வெளியானதில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவர்கள் வசித்த பகுதி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேபோல, கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டது. இங்கு பணியாற்றும் உதவி ஆய்வாளர், சிறப்பு பிரிவு தலைமை காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உதவி ஆய்வாளரின் மனைவிக்கும் நோய் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட உள்ளது.