கோவை: கோவையில் வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம்.அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம்.அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் செல்வபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜா (37) காமாட்சி (34) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிறுவனுக்கும் தாய், காமட்சிக்கும் செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
செல்போனில் விளையாடுவதை தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளான். நீண்ட நேரம் ஆகியும் மகன் அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோர் சென்று பார்த்தபோது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியை அடைந்து கதறி அழுதனர்.
இது குறித்து செல்வபுரம் காவல் நிலையதிற்கு தகவல் அளிக்கபட்டது. அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். பின்னர், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது.
தாய் கண்டித்ததால் தூக்குபோட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் செல்வபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜா (37) காமாட்சி (34) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிறுவனுக்கும் தாய், காமட்சிக்கும் செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
செல்போனில் விளையாடுவதை தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளான். நீண்ட நேரம் ஆகியும் மகன் அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோர் சென்று பார்த்தபோது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியை அடைந்து கதறி அழுதனர்.
இது குறித்து செல்வபுரம் காவல் நிலையதிற்கு தகவல் அளிக்கபட்டது. அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். பின்னர், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது.
தாய் கண்டித்ததால் தூக்குபோட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.