மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020 யை திரும்பப் பெற வலியுறுத்தி கறுப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிநாதம் பாளையத்தில் இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020 யை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கறுப்புக்கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிநாதம் பாளையத்தில் இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020 யை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கறுப்புக்கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதா - 2020 அமலாகும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரமும், கைத்தறிகளுக்கு 250 யூனிட் மின்சாரமும், விசைத்தறிகளுக்கு 750 மின்சாரமும் ரத்தாகும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது, என இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் குற்றம் சாட்டினர்.

அதோடு, மின்சாரம் சமூகநீதி பண்டம் என்ற பட்டியலில் இருந்து சந்தை பண்டமாக மாற்றப்பட உள்ளதால் தற்போது உள்ளதைவிட மின்சாரம் மூன்று மடங்கு விலை ஏற்றத்தை பெரும், என தெரிவித்த அவர்கள், இதனால் குறு விவசாயிகளும், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கும் மின்சாரம் இனி எட்டாக்கனியாகி விடும், என்றனர்.

தற்போது, பெட்ரோலியம் பொறுத்தவரை அந்த நிறுவனங்கள் தான் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதே போன்று எதிர்காலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களாலும், வெளியிடும் நிறுவனங்களாலும் தினசரி சந்தை விலை நிர்ணயம் செய்யப்படும் நிலை உருவாகும்.

எனவே, இந்த சட்டம் கடுமையாக அனைத்து மக்களையும் பாதிக்கக் கூடியது எனவும் இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காளிநாதம்பாளையம், அக்கணம் பாளையம், அய்யம்பாளையம், அல்லாலபுரம், குப்பிச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...