கோவையில் அதிகரிக்கும் கொரோனாவால் கொடிசியாவில் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் தயார்!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் மொத்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 3000 ஐ நெருங்கும் நிலையில், கொரோனா சிகிச்சை மையங்களும், நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே 340 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. அங்கு லேசான அல்லது அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.



இந்த நிலையில், தற்போது கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொடிசியா சிகிச்சை மையத்தில் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும், இங்கு நாளை முதல் கொரோனா உறுதி செய்யப்பட்ட அறிகுறியற்ற நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...