கோவை: சூலூர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் நீராபானம் இறக்க அனுமதி மறுத்து போலீசார் மிரட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை: சூலூர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் நீராபானம் இறக்க அனுமதி மறுத்து போலீசார் மிரட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தோட்டங்களில் நீரா பானம், பதநீர் மற்றும் கள் ஆகியற்றை இறக்க சூலூர் காவல்துறையினர் அனுமதி மறுத்து பானைகளை உடைப்பதும், பானைகளை எடுத்துச் சென்று தோட்டத்தின் உரிமையாளர்கள் மற்றும் கூலி ஆட்களை மிரட்டி செல்போனை பிடுங்கிச் செல்வது தொடர்கதையாகி வருவதாக நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
முதலமைச்சர் நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், கள்ளுக்கு தடை செய்வதை செயல்படுத்த முடியாது. ஏனெனில் நீரா பானம் இறக்கி அது நான்கு மணி நேரத்தில் புளிப்பு தன்மையை அடைந்து கள்ளாக மாறி விடும். இது இயற்கையின் செயல்பாடு என தெரிவித்தனர்.

இந்த நிலையில், கள் இறக்குவதாக காவல் துறையினரின் நடவடிக்கை எடுப்பது ஏற்கமுடியாது என தெரிவித்த நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர், காவல் துறையினர் விவசாயிகளிடம் நடந்து கொள்வதை கண்டித்து இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தோட்டங்களில் நீரா பானம், பதநீர் மற்றும் கள் ஆகியற்றை இறக்க சூலூர் காவல்துறையினர் அனுமதி மறுத்து பானைகளை உடைப்பதும், பானைகளை எடுத்துச் சென்று தோட்டத்தின் உரிமையாளர்கள் மற்றும் கூலி ஆட்களை மிரட்டி செல்போனை பிடுங்கிச் செல்வது தொடர்கதையாகி வருவதாக நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
முதலமைச்சர் நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், கள்ளுக்கு தடை செய்வதை செயல்படுத்த முடியாது. ஏனெனில் நீரா பானம் இறக்கி அது நான்கு மணி நேரத்தில் புளிப்பு தன்மையை அடைந்து கள்ளாக மாறி விடும். இது இயற்கையின் செயல்பாடு என தெரிவித்தனர்.
இந்த நிலையில், கள் இறக்குவதாக காவல் துறையினரின் நடவடிக்கை எடுப்பது ஏற்கமுடியாது என தெரிவித்த நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர், காவல் துறையினர் விவசாயிகளிடம் நடந்து கொள்வதை கண்டித்து இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.