கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்யக்கோரி கோவையில் பா.ஜ.கவினர் காவடி தூக்கி நூதன ஆர்ப்பாட்டம்!

கோவை: கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்யக்கோரி கோவையில் பா.ஜ.கவினர் காவடி தூக்கி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்யக்கோரி கோவையில் பா.ஜ.கவினர் காவடி தூக்கி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கந்த சஷ்டி கவச பாடல் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது இந்துக்கள் மனம் புண்படுத்தி உள்ளது என கூறி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர பா.ஜ.க அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் சித்தாபுதூர் பகுதியில் உள்ள அலுவலகம் முன்பு முருகன் படத்திற்கு பூஜை செய்த பின்னர் கந்த சஷ்டி கவசம் பாடியும் காவடி தூக்கி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





அப்போது, உடன் இருந்தவர்கள் திரிசூலத்தைக் கையில் ஏந்தி "முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா" என கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் நந்தகுமார் பேசுகையில், தமிழ் கடவுள் முருக கடவுளின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார். மேலும் தைப்பூச திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், கறுப்பர் கூட்டம் உறுதுணையாக இருக்கும் திமுக தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...