நீலகிரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோன தொற்று; பாதிப்பின் எண்ணிக்கை 587 ஆக உயர்வு..!

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது.


நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக மேல்கவ்வட்டியில் 10 பேருக்கும், கெந்தொரையில் 7 பேருக்கும் , மஞ்சகொம்பை,

அருவங்காடு, கடநாடு, புது அட்டபாயில், நஞ்சநாடு, வெலிங்டன், சின்ன குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், தொற்று உறுதியாகியுள்ள இப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, இன்று தொற்று உறுதியானவர்களில் பலர் வயதானவர்கள் என்பதால் கூடுதல் கவனத்தோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் தற்போது 214 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும், 371 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் எனவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...