கோவையில் நியாயவிலை கடையிலிருந்து அரிசி கடத்துவது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு புகார்!

கோவை: கோவை சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட இரண்டு நியாய விலைக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் இருசக்கர வாகனத்தில் கடத்துவது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு புகார் அளித்துள்ளது.

கோவை: கோவை சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட இரண்டு நியாய விலைக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் இருசக்கர வாகனத்தில் கடத்துவது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு புகார் அளித்துள்ளது.

கோவை மாவட்ட சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டக சாலையில் பத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் சில கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.



இதனை தொடர்ந்து, அரிசி கடத்தல் தொடர்பாக புகைப்படங்களுடன் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளது. இந்த புகாரினை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு நிர்வாகி லோகு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது;-

கோவை சிங்காநல்லூரில் உள்ள கடைகளில் பணிபுரியும் பெரும்பாலான பணியாளர்கள் ஒரே கடையில் பல வருடங்களாகப் பணி புரிவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் இருந்தாலும் வழங்குவதில்லை. அதேபோல குடும்ப அட்டையை பதிவு செய்யாமல் மின்தடை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வெளி நபர்களுக்கு பொருட்கள் வழங்குவது அதிகரிக்கிறது. ஏற்கனவே இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 11.20 மணி அளவில் பீளமேடு ஹோப் காலேஜ் தாஷ்கண்ட் வீதியில் உள்ள கடை எண் 58 மற்றும் 91 கடைகளில் அரிசி கடத்தப்படுவதாக புகைப்படம் எடுத்த பொதுமக்கள் எங்கள் அமைப்பிற்கு அனுப்பினர்.

மேலும் இந்த கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகள் வழங்கிய நியாயவிலைக்கடை பொருட்களை மூட்டை மூட்டையாக கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவ்வமைப்பின் நிர்வாகி லோகு கூறும்போது;-

இதுபோன்ற சமூக விரோத செயல்களால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, மேற்குறிப்பிட்ட அரிசி கடத்தல் தொடர்பாக கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...