கோவை மற்றும் ஷார்ஜா இடையேயான அனைத்து சரக்கு விமான சேவை இரண்டாவது முறையாக ரத்து!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் அனைத்து சரக்கு விமான சேவைகளும் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் அனைத்து சரக்கு விமான சேவைகளும் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுவதும் சர்வதேச விமான சேவைகள் இயக்கப்படவில்லை. அதேசமயம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, சரக்கு விமான போக்குவரத்து பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, கோவையில் இருந்து இதுவரை ஆறு சரக்கு விமான சேவை இயக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து சரக்கு சேவைகளை வழங்கிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தற்போது இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், சரக்கு விமானம் மற்றும் பயணிகள் விமானத்திலும், சரக்கு ஏற்றிச்செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தற்போது வரை ஊரடங்கு காலத்திலும், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் மூலம் கோவை மற்றும் ஷார்ஜா இடையே ஆறு முறை சரக்கு விமான சேவை இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 103 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த வார இறுதி வரை ஏர் அரேபியா சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...