கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் அனைத்து சரக்கு விமான சேவைகளும் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் அனைத்து சரக்கு விமான சேவைகளும் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுவதும் சர்வதேச விமான சேவைகள் இயக்கப்படவில்லை. அதேசமயம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, சரக்கு விமான போக்குவரத்து பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, கோவையில் இருந்து இதுவரை ஆறு சரக்கு விமான சேவை இயக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து சரக்கு சேவைகளை வழங்கிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தற்போது இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், சரக்கு விமானம் மற்றும் பயணிகள் விமானத்திலும், சரக்கு ஏற்றிச்செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தற்போது வரை ஊரடங்கு காலத்திலும், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் மூலம் கோவை மற்றும் ஷார்ஜா இடையே ஆறு முறை சரக்கு விமான சேவை இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 103 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த வார இறுதி வரை ஏர் அரேபியா சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.