இந்து மதத்தை இழிவுபடுத்துவோரின் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை - காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோவை: இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை என்று காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை என்று காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கந்தசஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டது தொடர்பாக கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது பேசிய அவர், முருக கடவுள்களுக்கு ஏராளமான பாடல்களை ஆன்மிகவாதிகள் எழுதி இருக்கின்றனர். கவசம் என்பது முருகப்பெருமானுக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்கும் கவசம் பாடப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார். இதை அருவருக்கத்தக்க பாடல் என்று யூ டியூப் வீடியோவில் ஒருவர் சொல்வது அநியாயமானது என கூறிய அவர், இதை தட்டிக்கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில் காவி கொடியுடன் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே போராடுகின்றன என தெரிவித்தார்.

இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்த காமாட்சிபுரி ஆதீனம், இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் அந்த அளவிற்கு இந்துக்களின் மனம் வேதனையடைந்து உள்ளதாக தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வீடுகள் தோறும் கந்தசஷ்டி கவசம் வழங்க வேண்டும் எனவும் கந்த சஷ்டியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனக்கூறிய அவர், முருகனின் வேல் கொச்சைபடுத்தப்பட்டு இருக்கின்றது எனவும் வேலை கொச்சைபடுத்தியவரை இறைவன் தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல, எவ்வளவோ பிரச்சினை இருக்கும் போது, சாதாரணமான இந்த பிரச்சினையை கிளப்பிவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்றவர், கந்தசஷ்டி விவகாரத்தை பெரிதாக நினைக்க தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், தென்மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவரை முருக கடவுளாக பக்தர்கள் பார்க்கின்றனர் எனவும் முருகனை யாராவது இழிவுபடுத்தினால் முத்துராமலிங்க தேவரின் பக்தர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்சுவர சுவாமிகள் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...