திருப்பூர்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று 8538 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
இருப்பினும் தமிழகத்தில் காவலருக்கான பற்றாக்குறை அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் 2020 21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் காவலருக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படுவது சந்தேகமே. ஏனெனில் தற்போதைய சூழலில் தேர்வுகள் நடத்தப்படும் பட்சத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு 2019 2020 ஆம் ஆண்டு அனைத்து தகுதிச் சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தினால் அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது.
எனவே, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி நிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு காலி பணியிடங்களில் பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 2019ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி நிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், அப்படி வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை மட்டும்தான் நடைபெறும் எனவும் பயிற்சி பெறும் ஆறு மாத காலமும் எந்தவித சம்பளமும் வேண்டாம் எனவும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா நிதி நெருக்கடியில் தவித்து வரும் தமிழக அரசுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று 8538 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
இருப்பினும் தமிழகத்தில் காவலருக்கான பற்றாக்குறை அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் 2020 21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் காவலருக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படுவது சந்தேகமே. ஏனெனில் தற்போதைய சூழலில் தேர்வுகள் நடத்தப்படும் பட்சத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு 2019 2020 ஆம் ஆண்டு அனைத்து தகுதிச் சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தினால் அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது.
எனவே, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி நிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு காலி பணியிடங்களில் பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 2019ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி நிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், அப்படி வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை மட்டும்தான் நடைபெறும் எனவும் பயிற்சி பெறும் ஆறு மாத காலமும் எந்தவித சம்பளமும் வேண்டாம் எனவும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா நிதி நெருக்கடியில் தவித்து வரும் தமிழக அரசுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.