கோவை: பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவை: பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ம் தேதி காவிச்சாயம் வீசியதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வந்த நிலையில் குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, போத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் கைதான பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குனியமுத்தூர் போலீசார் அனுமதி கோரி இருந்தனர். இதற்கு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி தமிழினியன் அனுமதி அளித்து உத்தரவு அளித்தார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ம் தேதி காவிச்சாயம் வீசியதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வந்த நிலையில் குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, போத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் கைதான பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குனியமுத்தூர் போலீசார் அனுமதி கோரி இருந்தனர். இதற்கு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி தமிழினியன் அனுமதி அளித்து உத்தரவு அளித்தார்.