கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கோவை: பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை: பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ம் தேதி காவிச்சாயம் வீசியதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வந்த நிலையில் குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, போத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் கைதான பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குனியமுத்தூர் போலீசார் அனுமதி கோரி இருந்தனர். இதற்கு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி தமிழினியன் அனுமதி அளித்து உத்தரவு அளித்தார். 

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...