கோவை: கொரோனா கால சிறப்பு கடன் ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தலைமையில் முகாம் அமைத்து வியாபாரிகளுக்கு கடன் பெற்று தர வேண்டும், என கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கொரோனா கால சிறப்பு கடன் ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தலைமையில் முகாம் அமைத்து வியாபாரிகளுக்கு கடன் பெற்று தர வேண்டும், என கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6,150 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடன் பெறுவதில் சிக்கல் உள்ளதால், கடனை எளிய முறையில் பெற்று தர சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் பங்குபெறும் படி சிறப்பு அமைக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில்:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை வங்கிகளிடம் சென்று கேட்டால் அலட்சியம் செய்கிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், வங்கி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் முகாம் அமைத்து சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க எளிய வழிமுறையை கையாள வேண்டும்.
மேலும் பதிவு பெறாத சாலையோர வியாபாரிகளிடம் உரிய ஆவணங்களை பெற்று பதிவு பெற வைக்கும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6,150 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடன் பெறுவதில் சிக்கல் உள்ளதால், கடனை எளிய முறையில் பெற்று தர சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் பங்குபெறும் படி சிறப்பு அமைக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில்:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை வங்கிகளிடம் சென்று கேட்டால் அலட்சியம் செய்கிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், வங்கி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் முகாம் அமைத்து சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க எளிய வழிமுறையை கையாள வேண்டும்.
மேலும் பதிவு பெறாத சாலையோர வியாபாரிகளிடம் உரிய ஆவணங்களை பெற்று பதிவு பெற வைக்கும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.