சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய சித்திரவதை மரணத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஓராண்டுக்கு சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து துாத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த, மனித உரிமை ஆணைய தலைவர், துரை ஜெயச்சந்திரன், தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், அந்த நோட்டீஸில் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்u பு கேமராக்களை பொருத்த வேண்டும். எனவும், அவற்றில் பதிவாகும் காட்சிகளை ஓராண்டு வரை பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய சித்திரவதை மரணத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஓராண்டுக்கு சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து துாத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த, மனித உரிமை ஆணைய தலைவர், துரை ஜெயச்சந்திரன், தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், அந்த நோட்டீஸில் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்u பு கேமராக்களை பொருத்த வேண்டும். எனவும், அவற்றில் பதிவாகும் காட்சிகளை ஓராண்டு வரை பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.