இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், மூத்த தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தையும் கட்சியின் மூத்த தலைவர்களையும் சமூக வலைத்தளங்களில் வலதுசாரியினர் தொடர் அவதூறுகளையும் வன்மத்தையும் பரப்பி வருகின்றனர். இதனை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தையும் கட்சியின் மூத்த தலைவர்களையும் சமூக வலைத்தளங்களில் வலதுசாரியினர் தொடர் அவதூறுகளையும் வன்மத்தையும் பரப்பி வருகின்றனர். இதனை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆறுமுகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ஜெயபாலன், கே.அஜய்குமார், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர் மற்றும் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதேபோல, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான ஜீவா இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் மற்றும் சிவசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். பல்வேறு இடங்களில் திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...