வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..! போலீசார் விசாரணை

கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது காஞ்சமலை தேயிலை தோட்டம். இங்கு தொழிலாளியாக பணியாற்றுபவர் சுரேஷ் (30). இவருக்கு வனிதா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில், நேற்று காலை மனைவி வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் சுரேஷ் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே, வனிதா மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டி திறக்காத காரணத்தினால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை திறந்து பார்த்த போது, சமையலறையில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 



இதையடுத்து, வால்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் தலைமை காவலர் முஜீப் ஆகியோர் சுரேஷின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...