கோவையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கோவை: கோவையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை துடியலூர் அருகில் வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் மனோகர்(39). இவர் நேற்று மதியம் 3 மணியளவில் என்.ஜி.ஜி.ஓ காலனி ரயில்வே கேட் அருகில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டு இருக்கையில் ஸ்பெலண்டர் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மனோகரனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பியோட முயன்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டபடியே இருவரையும் பிடிக்க முயன்றார். இவரது கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற இருவரை பிடித்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒருவர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக் (20) என்பதும் மற்றொருவர் தொண்டாமுத்தூர் சி.பி.சி. கார்டன் அவன்யூ பகுதியைச் சேர்ந்த பவுலேஷ் மகன் ஜிபின் வர்கீஸ்(40) என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...