கோவையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கோவை: கோவையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை துடியலூர் அருகில் வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் மனோகர்(39). இவர் நேற்று மதியம் 3 மணியளவில் என்.ஜி.ஜி.ஓ காலனி ரயில்வே கேட் அருகில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டு இருக்கையில் ஸ்பெலண்டர் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மனோகரனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பியோட முயன்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டபடியே இருவரையும் பிடிக்க முயன்றார். இவரது கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற இருவரை பிடித்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒருவர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக் (20) என்பதும் மற்றொருவர் தொண்டாமுத்தூர் சி.பி.சி. கார்டன் அவன்யூ பகுதியைச் சேர்ந்த பவுலேஷ் மகன் ஜிபின் வர்கீஸ்(40) என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...