நிறபேதத்தை நையாண்டி செய்த அமெரிக்க நாவலாசிரியருக்கு மான்புக்கர் பரிசு

பிரிட்டன் நாட்டில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆங்கில நாவல்களில் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு ‘மான்புக்கர் பரிசு’ அளிக்கப்படுவது வழக்கம்.

கடந்த 48 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கப்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் 155 நாவல்களை வாசித்து, அவற்றில் 13 நாவல்களை இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்தனர்.

பின்னர் நடைபெற்ற பல மணிநேர பரிசீலனைக்கு பிறகு அமெரிக்காவை சேர்ந்த பிரபல நையாண்டி எழுத்தாளரான பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற சமூக நையாண்டி நாவல் இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் வழக்கொழிந்துப்போன அடிமைமுறையையும், பள்ளிகளில் நிறபேதத்தால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவதையும் மீண்டும் நடைமுறைப்படுத்தி, அமெரிக்க வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தை ஆப்பிரிக்க-அமெரிக்காரான ‘பான்பான்’ என்பவர் தனது அயராத முயற்சியால் மீண்டும் அமெரிக்க வரைபடத்தில் சேர்ப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள ‘தி செல்அவுட்’ நாவல் முழுவதும் நையாண்டி நெடியுடன் தற்கால அமெரிக்காவில் நிலவிவரும் நிறபேத பாகுபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

289 பக்கங்களை கொண்ட இந்த நாவலுக்கு நேற்று லண்டன் நகரில் நடைபெற்ற விழாவில் கார்ன்வால் இளவரசி கமிலா பார்க்கர் மான்புக்கர் பரிசுடன் 50 ஆயிரம் பவுண்டுகளை ரொக்கமாக வழங்கினார்.



54 வயதாகும் பால் பீட்டி இந்தப் பரிசை பெறும் முதல் அமெரிக்க எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர்களான அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் பெருமைக்குரிய இந்தப் பரிசை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...