தி.மு.கவினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி வால்பாறையில் அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 15 பேர் கைது!

கோவை: வால்பாறையில் அ.தி.மு.க அரசு தி.மு.க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து வால்பாறை தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: வால்பாறையில் அ.தி.மு.க அரசு தி.மு.க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து வால்பாறை தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகரமன்ற தலைவரும் ஒன்றிய செயலாளருமான கோழிக்கடை கனேசன் தலைமை தாங்கினார்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செத்துப்போச்சு செத்துப்போச்சு ஜனயாநகம் செத்துப்போச்சு, கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பொய் வழக்கு போடும் அ.தி.மு.க ஆட்சியை கண்டிக்கிறோம் என கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கனேசன், தி.மு.க தொழிற் சங்கத் தலைவர் சௌந்தர பாண்டியன், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் ஜானகிராமர், சத்தியவாணி முத்து உட்பட கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 11 ஆண்கள் 4 பெண்கள் உட்பட 15 பேர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...