கோவை: தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றிற்கு சிகிச்சை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றிற்கு சிகிச்சை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதேபோல, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ், அரசால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை காப்பீட்டு திட்டத்தின் கீழ், கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
மேலும், கட்டணம் தொடர்பான புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதேபோல, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ், அரசால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை காப்பீட்டு திட்டத்தின் கீழ், கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
மேலும், கட்டணம் தொடர்பான புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.