கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் அரியாண்டிபுரம் பகுதியை சேர்ந்த டைம்ஸ் மேரியின் மகள் பிரியா(25). இவருக்கும் கோவையை வீரபாண்டி நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி விநோத்(30) ஆகியோருக்கு கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதியினருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் நேற்று பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரியாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து பிரியாவின் உறவினர்கள் கூறுகையில், விநோத்திற்கு குடிபழக்கம் இருந்ததாகவும் பிரியாவின் தாயாரிடம் இருந்து பணம் வாங்கி தரச் சொல்லி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு டைம்ஸ் மேரி 10,000 ரூபாய் பணத்தை மகளுக்கு கொடுத்து உள்ளார்.
இந்நிலையில், நேற்று விநோத்தின் சகோதரர் திருமணம் நடைபெற்றது. இதற்கு பணம் வாங்கி தருமாறு பிரியாவை வற்புறுத்தியதால் இது குறித்து பிரியா தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தானே பணம் கொடுத்தேன், அடிக்கடி பணம் கேட்டால் என்ன செய்வது என டைம்ஸ் மேரி கேட்டு உள்ளார்.
இந்த நிலையில், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, பிரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் கொலை செய்யப்பட்டு உள்ளதாக சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் அரியாண்டிபுரம் பகுதியை சேர்ந்த டைம்ஸ் மேரியின் மகள் பிரியா(25). இவருக்கும் கோவையை வீரபாண்டி நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி விநோத்(30) ஆகியோருக்கு கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதியினருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் நேற்று பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரியாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து பிரியாவின் உறவினர்கள் கூறுகையில், விநோத்திற்கு குடிபழக்கம் இருந்ததாகவும் பிரியாவின் தாயாரிடம் இருந்து பணம் வாங்கி தரச் சொல்லி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு டைம்ஸ் மேரி 10,000 ரூபாய் பணத்தை மகளுக்கு கொடுத்து உள்ளார்.
இந்நிலையில், நேற்று விநோத்தின் சகோதரர் திருமணம் நடைபெற்றது. இதற்கு பணம் வாங்கி தருமாறு பிரியாவை வற்புறுத்தியதால் இது குறித்து பிரியா தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தானே பணம் கொடுத்தேன், அடிக்கடி பணம் கேட்டால் என்ன செய்வது என டைம்ஸ் மேரி கேட்டு உள்ளார்.
இந்த நிலையில், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, பிரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் கொலை செய்யப்பட்டு உள்ளதாக சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.