கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது!

கோவை: கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற ஓட்டுனர் மீது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி மகளை காணாததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, போலீசாரின் விசாரணையில் மாணவியை அருகில் வசிக்கும் ஓட்டுனரான செல்வம்(32) கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரிய வந்தது.

இதனிடையே, மாணவியை மீட்ட போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...