கோவை திருச்சி சாலையில் அருகே கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் அடைப்பு..! கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!

கோவை: கோவை திருச்சி சாலையில் உள்ள பெர்க்ஸ் பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை திருச்சி சாலையில் உள்ள பெர்க்ஸ் பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இருப்பதால், இந்த கால்வாய் வழியாக வரும் மழை நீரானது இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீருடன் சேர்ந்து, கால்வாய் அடைப்பு காரணமாக வெளியேறி சாலைகளில் வெள்ளம் போல தேங்கி நிற்கும் அவலம் ஏற்படும், என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



அதேபோல, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளதால், மழை காலங்களில் கழிவுநீர் ஓடி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் எனவும், குறிப்பாக, தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, யானைக்கால், சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடும் என பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் உடனடியாக பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கழிவுநீர் கால்வாயை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும் எனவும், குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...