கோவையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது நான்கு சக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை: கோவையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது நான்கு சக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது நான்கு சக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை அடுத்து காரமடை பகுதி புங்கம்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர் கடந்த 31ம் தேதி மாலை புரூக்பாண்ட் சாலை சிரியன் சர்ச் அருகில் இயற்கை உபாதயை கழிக்க தான் ஓட்டி வந்த பொலேரோ நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை வாகனத்திலேயே வைத்து விட்டு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு சக்கர வாகனத்தை திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இயற்கை உபாதையை கழித்த பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது நான்கு சக்கர வாகனம் நிறுத்திய இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணகுமார், சுற்றும் முற்றும் தேடி உள்ளார்.

பின்னர் வாகனம் திருடப்பட்டு உள்ளதை அறிந்தவர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...