மயானத்தில் குப்பை கிடங்கு அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: மயானத்தில் குப்பை கிடங்கு அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: மயானத்தில் குப்பை கிடங்கு அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட சங்கனூர் பகுதியில் உள்ள கண்ணப்ப நகரில் பல ஆண்டுகளாக இந்துக்களின் மயானம் இருந்து வருகிறது. தற்போது அந்த மயானத்தில் குப்பை தரம் பிரிக்க இரும்பு பந்தல் அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் மாசு ஏற்பட்டு நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாகவும் மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்பட்டு குழந்தைகள் வயதானவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியின் அருகில் தனியார் பள்ளிகள், ஆன்மீக தளங்கள் உள்ளன. எனவே இங்கு குப்பை கிடங்கிற்கு அனுமதி அளித்தால் போத்தனூர் குப்பை கிடங்கு போல அப்பகுதியே துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும் என்பதாலும் கொரோனா பாதிப்பு இன்னும் சரிவர குறையாத நிலையில் இது போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினர். மேலும், உடனடியாக இதனை நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாரத் சேனா அமைப்பினர் மனு அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...