தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா. கோவை, நீலகிரி மற்றும் திருப்பூரில் புது தொற்று இல்லை..!
கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று புதிய உச்சத்தை இன்று எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 22,333 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் யாருக்கும் புதிதாக தொற்று இல்லை என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் யாருக்கும் புதிதாக தொற்று இல்லை என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.