நீலகிரி: நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 51 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி: நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 51 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகள் வழியே கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கநல்லா சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெள்ளி, தலைமையில் காவலர்கள் செல்வகுமார், சுப்புராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் 51 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரின் உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை கொண்டு வந்த சச்சின் மஹதித்திடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகள் வழியே கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கநல்லா சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெள்ளி, தலைமையில் காவலர்கள் செல்வகுமார், சுப்புராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் 51 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரின் உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை கொண்டு வந்த சச்சின் மஹதித்திடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.