நீலகிரி: குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்க வந்த போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவித்த கன்டோண்மென்ட் துணைத்தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி: குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்க வந்த போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவித்த கன்டோண்மென்ட் துணைத்தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு கடந்த 28ம் தேதி வியாழக்கிழமை குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள பாபு கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.
அப்போது, அதிமுகவை சேர்ந்த கன்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் பாரதியார், கவுன்சிலர்கள் துரைராஜ், சீனிவாசன், மேரி ஷூபா, லதா மற்றும் வழக்கறிஞர் தினேஷ் ஆகியோர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு காரை முற்றுகையிட்டு கறுப்பு கொடி காட்டி கோஷம் எழுப்பினர். அதிமுகவை சேர்ந்தவர்களே அதிமுக எம்.எல்.ஏ.விற்கு கறுப்பு கொடி காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, குன்னூர் அருகேயுள்ள காரக் கொரையை சேர்ந்த மோகன் என்பவர் வெலிங்டன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் ஊரடங்கு அமலில் இருந்த போது அதனை மீறி கூட்டம் சேர்ந்ததாக துணைத் தலைவர் பாரதியார் உட்பட 6 பேர் மீது வெலிங்டன் காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.