திருப்பூர்: திருப்பூரில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக கூறி அசாம் மாநில தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக கூறி அசாம் மாநில தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.
திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த காரணத்தால் இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக காலை மூன்று மணிக்கே காவல்துறையினர் ரயில் நிலையம் வரவழைத்துள்ளனர். இதனை நம்பி ரயில்நிலையம் வந்த அசாம் மாநில தொழிலாளர்களிடம் இன்று சிறப்பு ரயில் இயக்கப்படாது என்று கூறி காவல் துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதனால் ஏமாற்றமடைந்த அசாம் மாநில தொழிலாளர்கள் அரிசி கடை வீதியில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பள்ளிக்கு சென்றனர். டோக்கன் தருவதாக வரவழைத்து விட்டு தற்போது அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாகவும், காலை 3 மணியிலிருந்து காத்திருக்கும் எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தரவில்லை எனவும் எப்போது ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டினர்.
திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த காரணத்தால் இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக காலை மூன்று மணிக்கே காவல்துறையினர் ரயில் நிலையம் வரவழைத்துள்ளனர். இதனை நம்பி ரயில்நிலையம் வந்த அசாம் மாநில தொழிலாளர்களிடம் இன்று சிறப்பு ரயில் இயக்கப்படாது என்று கூறி காவல் துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.
இதனால் ஏமாற்றமடைந்த அசாம் மாநில தொழிலாளர்கள் அரிசி கடை வீதியில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பள்ளிக்கு சென்றனர். டோக்கன் தருவதாக வரவழைத்து விட்டு தற்போது அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாகவும், காலை 3 மணியிலிருந்து காத்திருக்கும் எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தரவில்லை எனவும் எப்போது ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டினர்.