கோவையில் பன்றி இறைச்சியை கோவில் வாசலில் வீசிச்சென்ற நபர் கைது..!

கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சியை வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் ஹரி என்ற 48 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சியை வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் ஹரி என்ற 48 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பன்றி இறைச்சியை வீசி சென்றுள்ளனர்.

கோவில் அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கோவை கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரி ராம்பிரகஷ் (48) என்பவரை கைது செய்துள்ளனர்.

இன்று காலை அவர் கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பன்றி இறைச்சி கடையில், கறி வாங்கியுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அதை உறுதி செய்ய எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டிவிட் செய்துள்ள கோவை மாநகர ஆணையாளர், சுமித் சரண் தெரிவிக்கையில், சம்பத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், சமூக வலைதளங்களில் யாரும் மதம் மற்றும் வெறுப்பு சார்ந்த உரையாடல்களை தவிர்த்து, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...