கோவை: கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு இன்று இயக்கப்பட்ட 32வது ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1600 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை: கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு இன்று இயக்கப்பட்ட 32வது ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1600 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கோவையில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு இன்று மதியம் 1.45 மணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1600 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக காலை 11 மணியளவில் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்பட்டு, சிறப்பு ரயிலில் தனி மனித இடைவெளியுடன் அமர வைத்து உணவு, தண்ணீர், முககவசம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையின் கூட்டு முயற்சியால் தற்போது வரை 45 ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ஒரு ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று மாலை கோவையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கோவையில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு இன்று மதியம் 1.45 மணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1600 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக காலை 11 மணியளவில் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்பட்டு, சிறப்பு ரயிலில் தனி மனித இடைவெளியுடன் அமர வைத்து உணவு, தண்ணீர், முககவசம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையின் கூட்டு முயற்சியால் தற்போது வரை 45 ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ஒரு ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று மாலை கோவையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.