கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சியை மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சியை மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சலீவன் வீதியில் வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் ஆகியவை அடுத்தடுத்து உள்ளது.
இந்த கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பன்றி இறைச்சியை வீசி சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் கோவில் படிக்கட்டுகளில் இறைச்சி வீசப்பட்டு இருப்பதை கண்டு வெரைட்டி ஹால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்துத்துவ அமைப்பினர் கோவில் வாசலில் பன்றி இறைச்சியை வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை மேற்கொண்டார். கோவில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, கோவில் முன்பாக வீசப்பட்டு இருந்த இறைச்சி அகற்றப்பட்டு கிருமி நாசினி, மஞ்சள் தெளிக்கப்பட்டது. கோவில் முன்பு இறைச்சியை வைத்து சென்றவர்கள் யார் என்பது குறித்து வெரைட்டி ஹால் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.