குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை..! உதகை சாலையில் ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி: குன்னூரில் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், உதகை சாலையில் ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி: குன்னூரில் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், உதகை சாலையில் ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் காணிக்கராஜ் நகர் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரம் ஒன்று திடீரென்று சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இது குறித்து தகவலறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் பணியாளர்கள் முரளி, நித்யானந்தம், சேகர் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



சுமார் அரை மணி நேரத்தில் மரம் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. சாலையில் மரம் விழுந்த போது எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...