கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..! பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்ததால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர். அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கவுண்டம்பாளையம், துடியலூர், சாய்பாபாகாலனி, சிங்காநல்லூர், நரசிம்மநாய்க்கன்பாளையம் மற்றும் பிற பகுதிகள் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்ப சலனம் காரணமாக அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இதனிடையே, மழை காரணமாக கருமத்தம்பட்டி ராயர்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகில் இருந்த ஆலமரம் சாய்ந்தது.



மேலும் மரம் மின்கம்பம் மீது விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சார தடை ஏற்பட்டு உள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...