கோவை: கோவை அரசு கல்லூரியில் காலை மற்றும் மதிய நேர முறையை மாற்றக் கூடாது என இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: கோவை அரசு கல்லூரியில் காலை மற்றும் மதிய நேர முறையை மாற்றக் கூடாது என இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தற்பொழுது அரசு கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என்று இரு சுழற்சி முறையில் கல்வி நேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அரசு கல்லூரிகளில் இருக்கும் இரு சுழற்சி மறையானது ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையக் கூடும். இடைநிற்றல் அதிகமாக கூடும். எனவே, இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அதுமட்டுமின்றி அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலோனோர் பார்ட் டைம் வேலை செய்து படித்து வருபவர்கள்.
ஆகவே, தற்போது உள்ள இந்த இரு சுழற்சி முறையானது ஒரு முறைக்கு மாற்றப்பட்டால் பல்வேறு மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடும். அதுமட்டுமின்றி இது அமலுக்கு வந்தால் கல்லூரிகளில் படிக்கக் கூடிய ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் நிலை பாதிக்கப்படும். எனவே இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.