திருப்பூர்: திருப்பூரில் பணியின் போது உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் பணியின் போது உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரம் பி.என் ரோடு அண்ணா நகரைச் சேர்ந்த விவிதன் (31) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை விவிதன் துணை மின் நிலையத்தில் மின்சார கம்பத்தில் பணி செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த நிலையில், விவிதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும், இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடலை வாங்க மறுத்து திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கூடியுள்ளனர்.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசு சார்பில் நிச்சயம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினர். மேலும், உடலை வாங்க மறுத்துள்ளவர்களிடம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.