கோவை: மேட்டுப்பாளையம் அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழையால் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரடபட்டிருந்த பப்பாளி மரங்கள் மற்றும் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழையால் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரடபட்டிருந்த பப்பாளி மரங்கள் மற்றும் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் காரமடை மேற்கு பகுதியில் உள்ள காளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முகலாம் பாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஒரு ஏக்கர் பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமானது.

முகலாம்பாளையத்தை சேர்ந்த வெள்ளிங்கிரியம்மாள் என்பவர் தனது 1 ஏக்கர் தோட்டத்தில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றால் பப்பாளி மரங்கள் அனைத்தும் வேரோடு முறிந்து சேதமானது. ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரை செலவு செய்து பயிர்செய்யப்பட்ட பப்பாளி முழுவதும் சாய்ந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதேபோல், தேக்கமபட்டியில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் மற்றும் கெம்மாரம்பளையம் ஊராட்சி மேட்டூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் மாட்டுக்கொட்டகை நேற்று இரவு பெய்த பலத்த சூறாவளி காற்றால் மேற்கூரை முழுவதும் காற்றில் தூக்கி எரியப்பட்டன. தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் இழப்பினை சந்தித்து வரும் நிலையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் காரமடை மேற்கு பகுதியில் உள்ள காளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முகலாம் பாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஒரு ஏக்கர் பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமானது.
முகலாம்பாளையத்தை சேர்ந்த வெள்ளிங்கிரியம்மாள் என்பவர் தனது 1 ஏக்கர் தோட்டத்தில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றால் பப்பாளி மரங்கள் அனைத்தும் வேரோடு முறிந்து சேதமானது. ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரை செலவு செய்து பயிர்செய்யப்பட்ட பப்பாளி முழுவதும் சாய்ந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதேபோல், தேக்கமபட்டியில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் மற்றும் கெம்மாரம்பளையம் ஊராட்சி மேட்டூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் மாட்டுக்கொட்டகை நேற்று இரவு பெய்த பலத்த சூறாவளி காற்றால் மேற்கூரை முழுவதும் காற்றில் தூக்கி எரியப்பட்டன. தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் இழப்பினை சந்தித்து வரும் நிலையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.