கோவை: வால்பாறை ஆம்னி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.
கோவை: வால்பாறை ஆம்னி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 100க்கும் மேற்பட்ட ஆம்னி வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வால்பாறையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் மகேஸ்வரி காந்தி சிலை வளாகத்தில் வால்பாறை ஆம்னி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டுநர்கள் முறைப்படியான ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் பதிவு சான்றிதழ், காப்பீட்டுதிட்ட சான்றிதழ்களை முறையாக புதுப்பித்து வைத்திருக்க வேண்டும், அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி வாகனத்தை இயக்க வேண்டும், இப்பகுதிக்கு புதிதாக வரும் நபர்கள் சந்தேகப்படும்படி இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறின்றி நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து ஓட்டுநர்கள் சங்கத்தலைவர்கள் பேசியபோது, போதுமான வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், முஜீப், காவல்துறையினர், ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் சந்தோஷ் உட்பட 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.