நீலகிரி: சென்னையிலிருந்து நீலகிரி வருகைபுரிந்த செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் 300 குடும்பங்களை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
நீலகிரி: சென்னையிலிருந்து நீலகிரி வருகைபுரிந்த செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் 300 குடும்பங்களை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பொன்னூர் பகுதியில் வசிக்கும் சீதாராணி (45). இவரின் மகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கூடலூர் பொன்வயல் பகுதிக்கு வருகைபுரிந்த அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரதுறையினர் கூடலூர், பொன்னூர், பொன்வயல், கைதக்கொல்லி உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 300 குடும்பங்களை தனிமைப்படுத்தினர்.