திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் வலியுறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் வலியுறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூரில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்டு வலியுறுத்தி வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதேபோல், வங்கிகளில் பெற்ற கடனுக்கு தவணைகள் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்களிடம் வங்கிகள் நிலுவை தொகையை கேட்டு வலியுறுத்தக் கூடாது என திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் மன்சூர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.