திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கியது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 ல் நடைபெற்ற +2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் பணிகள் இன்று துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து அவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெறுகிறது எனவும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிபுரிய வெளியூர்களில் தங்கியுள்ள திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்துறையின் சார்பில் 16 வழித்தடத்தில் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இப்பணிக்காக முதன்மை தேர்வாளராக 200 நபர்களும், கூர்ந்தாய்வு அலுவலராக 200 நபர்களும், உதவி தேர்வாளராக 1200 நபர்களும் இதுதவிர 87 அலுவலக பணியாளர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு, கைகளை சுத்தப்படுத்தும் பொருட்டு தேவையான பொருட்களுடன் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதிப்பீட்டு முகாமில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.