கோவை: கோவில்களை திறக்க அனுமதிக்க கோரி கோவில்கள் முன்பு தோப்புக் கரணம் போட்டு நூதன முறையில் கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கோவை: கோவில்களை திறக்க அனுமதிக்கக் கோரி கோவில்கள் முன்பு தோப்புக் கரணம் போட்டு நூதன முறையில் கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வழிபட்டு உரிமைகளை மீட்க வரும் 26ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக் கரணம் போடும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான கோவில்கள் உள்ள நிலையில் பெரிய கோயில்களைத் தவிர மற்ற கோவில்களில் கூட்டம் வருவது குறைவான ஒன்று எனவும் சில கோவில்கள் தனியார் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கிராம கோவில்களில் வரக்கூடிய கூட்டம் குறைவாக தான் இருக்கும் என்பதால் கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபட வழிமுறைகளை பின்பற்றி அரசு அதிகாரம் வழங்கலாம் என தெரிவித்து இருந்தார். கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும் எனவும் இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், கோவையில் கோனியம்மன் கோவில், லக்ஷ்மி நரசிம்மன் கோவில், காந்திபார்க் முருகன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இருபது இடங்களில் இந்து முன்னணியினர் தோப்புக் கரணம் போட்டு கோயில்களை திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.