கோவை: கோவை ஈச்சனாரி அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ஈச்சனாரி அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோட் லால். இவரது மனைவி சகுந்தலா (36). இத்தம்பதியினர் கோவை ஈச்சனாரி கணேசபுரம் பகுதி விநாயகர் கோவில் பகுதியில் வசித்து வருகின்றனர். சோட் லால் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சோட் லால் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து உள்ளார். இதில் சகுந்தலாவின் உடலில் தீ பற்றியதில் வலி தாங்க முடியாமல் அலறினார்.
வீட்டில் இருந்து புகை மண்டலமாக இருந்ததை கண்டும், சகுந்தலாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். சோட் லாலுவுக்கு இரு கைகளில் பலத்த தீ காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.