நீலகிரி: குன்னூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி: குன்னூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் போகி தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (51) என்பவரது மகன் ராஜாராம் (21). இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில், நேற்று தனது வீட்டில் ராஜாராம் கஞ்சா போதையில் தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தகப்பனார் ரவிச்சந்திரன் தட்டி கேட்டார். இதனால் ராஜாராம் தனது தகப்பனார் ரவிச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், வாக்குவாதம் முற்றவே ராஜாராம் வீட்டிலிருந்த வெட்டுக் கத்தியை எடுத்து அவரது இடது காலில் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த வெலிங்டன் காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று தந்தையை வெட்டுக் கத்தியால் வெட்டிய ராஜாராமை கைது செய்து குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குன்னூர் மாஜிஸ்த்ரேட் ராஜாராமை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராஜாராம் ஊட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.