கோவை: கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வீடுகளில் சிறு சிறு குழுக்களாக அமர்த்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வீடுகளில் சிறு சிறு குழுக்களாக அமர்த்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகைத் திருநாள், பக்ரீத் பண்டிகை எனப்படும் தியாகத் திருநாள் ஆகிய இரு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கோவையில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பெருநாட்களில் பள்ளி வாசல்களில் அனைவரும் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையானது ரத்து செய்யப்பட்டு, எளிய முறையில் வீடுகளில் தொழுகை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம், ஜி.எம்.நகர், கரும்புகடை, குனியமுத்தூர், கோட்டைமேடு, சாரமேடு, போத்தனூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே இன்று காலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
10 முதல் 15 பேர் வரை ஒவ்வொரு வீட்டு மாடியிலும் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
கொரோனா காரணமாக முதல் முறையாக வீடுகளில் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு தொழுகை நடத்துவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இன்றைய தினத்தில் ஏழைகளுக்கும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருவதாகவும் இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். தங்கள் இல்லங்களில் செய்யப்படும் உணவு வகைகளை சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பகிர்ந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.