கோவை: கோவையில் குடும்ப பிரச்சினை காரணமாக மது போதையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் குடும்ப பிரச்சினை காரணமாக மது போதையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் குமார்(38). இவரது மனைவி காவேரி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் பிரதீப் குமார் மது போதைக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. மது போதையை மறக்க பிரதீப் குமாரை கோவில் பாளையம் பகுதியில் உள்ள மறு வாழ்வு மையத்தில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று கோவில் பாளையம் மறு வாழ்வு மையத்தில் இருந்த பிரதீப் குமார் அங்கிருந்த தப்பித்து தனது வீடு உள்ள இடையர்பாளையம் பகுதிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த காவேரி பிரதீப்குமாருடன் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அவரின் மனைவி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த துடியலூர் காவல் நிலைய போலீசார் பிரதீப் குமார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
மேலும் அவர் மதுபோதையில் இருந்ததால் காவேரியிடம் கணவனை அழைத்து கொண்டு காலையில் காவல் நிலையம் வரும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப்குமார் தனது மனைவியிடம் மீண்டும் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவேரி மீண்டும் காவல் நிலைய அதிகாரிகளை அழைத்து புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அங்கு வந்த போலீசார் பிரதீப்குமார் இல்லாததால் திரும்பி சென்றனர். இந்நிலையில், மனைவியிடம் சண்டை போட்டு சென்றவர் மதுபோதையில் என்ன செய்வது? எங்கே தங்குவது? என தெரியாமல் இடையர்பாளையம் சுடுகாடு பகுதிக்கு வந்தவர் அங்கு தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் தூக்கில் ஒருவர் தொங்குவதாக அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தூக்கில் தொங்கியவர் பிரதீப்குமார் என்பது உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.