கோவை: தமிழக அரசு விதித்த நிபந்தனைகளுடன் கோவையில் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க துவங்கியது.
கோவை: தமிழக அரசு விதித்த நிபந்தனைகளுடன் கோவையில் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க துவங்கியது.
கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்திற்கு மத்திய மாநில அரசுகள் தடை விதித்து இருந்தது. இந்நிலையில் சில தளர்வுகளுடன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.
ஆட்டோக்கள் மற்றும் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர் உக்கடம், சாய்பபாபகாலனி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள ஆட்டோக்கள்.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்து கொண்டு வரும் பயணிகளுக்கு கைகளில் பயன்படுத்தி, முக கவசம் போன்ற முக்கிய விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.
மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தியும் வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தருமாறு ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.