கோவையில் இரு நாட்களுக்கு முன் காணாமல் போன ஒப்பந்த தூய்மை பணியாளர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுப்பு! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் கடந்த இரு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் கடந்த இரு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் ரயில்வே கேட் பகுதியில் அருகில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தபோது கிணற்றில் ஆண் சடலம் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



முதற்கட்ட விசாரணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர், கோவை சிங்காநல்லூர் சி.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண்குமார் என்பதும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

அருண்குமார் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஒரு நாள் கடந்தும் மகன் வராததாலும் அவர் குறித்த எந்த தகவலும் இல்லாததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டது, காணாமல் போன அருண்குமார் தான் என்பதை உறுதி செய்தனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் அருகில் அருண்குமார் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அருண்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மதுபோதையில் கால் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...